search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ விபத்து நடந்த வீட்டின் முன்பு தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்றதையும், வீட்டினுள் பொருட்க
    X
    தீ விபத்து நடந்த வீட்டின் முன்பு தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்றதையும், வீட்டினுள் பொருட்க

    வீட்டில் கியாஸ் கசிந்து தீ

    விருதுநகரில் வீட்டில் கியாஸ் கசிந்து தீ பிடித்தது. இதில் பெண் ஒருவர் காயம் அடைந்தார்.
    விருதுநகர்

    விருதுநகர் பாண்டியன் நகர் முத்தால்நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. மாட்டு தீவன தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு தனது மனைவி மீனாட்சி சங்கீதா(வயது35) மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் படுத்து தூங்கினார். 

    இன்றுகாலை மீனாட்சி சங்கீதா விழித்தெழுந்து சமையலறையில் சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டரின் டியூப் பகுதியில் குபீரென தீப்பிடித்தது. இதில் மீனாட்சி சங்கீதாவுக்கு காயம் ஏற்பட்டது. 

    இதனால் அவர் பயத்தில் அலறினார். இதையடுத்து அவரும், அவரது கணவர் மற்றும் குழந்தைகளும் வீட்டைவிட்டு வெளியே சென்றனர். தீவிபத்து குறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டுவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    இந்த தீவிபத்து குறித்து விருதுநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். சிலிண்டர் டியூப்பில் கியாஸ் கசிவு ஏற்பட்டதன் காரணமாக தீப்பிடித்துள்ளது. 

    தீப்பிடித்தது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு வீட்டில் இருந்த அனைவரும் வெளியேறியதாலும், தீ உடனடியாக அணைக்கப்பட்டதாலும் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
    Next Story
    ×