search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    செங்கல்பட்டில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,196 பேர் பாதிப்பு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,196 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 2,196 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 5,796 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 699 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2573 ஆக உயர்ந்துள்ளது. 17,524 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 738 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85 ஆயிரத்து 274 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 78 ஆயிரத்து 642 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1280 பேர் உயிரிழந்துள்ளனர். 5,351 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×