என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புப்படம்
கோவையில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி
By
மாலை மலர்20 Jan 2022 11:39 AM GMT (Updated: 20 Jan 2022 11:39 AM GMT)

கோவையில் மதுபோதையில் போலீஸ் நிலையம் முன்பு தொழிலாளி தீக்குளித்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது37). மின் மயானத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் சிவக்குமார் தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் பெட்ரோல் பாட்டிலுடன் போத்தனூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். திடீரென போலீஸ் நிலையம் முன்பு வைத்து நீதி வேண்டும், நீதி வேண்டும் என கூறியபடி பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார்.
கண் இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் சிவக்குமார் அங்கும் இங்குமாக ஓடினார். இதனை பார்த்த அங்கு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டனர்.
பின்னர் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அப்போது போலீசார் சிவக்குமாரிடம் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் குடிபோதையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போத்தனூர் போலீசார் சிவக்குமார் மீது தற்கொலைக்கு முயற்சி செய்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது37). மின் மயானத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் சிவக்குமார் தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் பெட்ரோல் பாட்டிலுடன் போத்தனூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். திடீரென போலீஸ் நிலையம் முன்பு வைத்து நீதி வேண்டும், நீதி வேண்டும் என கூறியபடி பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார்.
கண் இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் சிவக்குமார் அங்கும் இங்குமாக ஓடினார். இதனை பார்த்த அங்கு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டனர்.
பின்னர் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அப்போது போலீசார் சிவக்குமாரிடம் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் குடிபோதையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போத்தனூர் போலீசார் சிவக்குமார் மீது தற்கொலைக்கு முயற்சி செய்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
