search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மழைநீர் தேங்காமல் இருக்க உடுமலையில் ஓடைகள் அமைப்பு

    சாலையின் இருபுறமும் மழைநீர் தேங்கும் வகையில் ஓடையில் குழி தோண்டப்பட்டு வருகிறது
    உடுமலை:

    மழைக்காலங்களில் பெய்யும் நீரை வீணாக்காமல் மழைநீர் சேமிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்  உடுமலை தாராபுரம் ரோடு மற்றும் திருப்பூர் சாலையை இணைக்கும் சாலையோரத்தில் சின்னவீரம்பட்டி ஊராட்சி சார்பில் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் மூலம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

    சாலையின் இருபுறமும் மழைநீர் தேங்கும் வகையில் ஓடையில் குழி தோண்டப்பட்டு வருகிறது.இதன் வாயிலாக மழை காலத்தில் சாலையில் நீர் தேங்காததோடு பெய்யும் மழை நீர் சாலையோர பள்ளத்தில் தேங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×