search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    கள்ளக்குறிச்சி அருகே கூலி தொழிலாளி உயிரிழப்பு- போலீசார் விசாரணை

    கள்ளக்குறிச்சி அருகே கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூர் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தாணியேல் (வயது 49) கூலி தொழிலாளி, இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று காலை திருக்கனங்கூர் பகுதியில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் தாணியேல் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×