என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காரைக்கால் அருகே விபத்து- அக்காள்-தங்கை உள்பட 4 பேர் காயம்
Byமாலை மலர்19 Jan 2022 11:26 AM GMT (Updated: 19 Jan 2022 11:26 AM GMT)
காரைக்கால் அருகே நடந்த விபத்தில் அக்காள்-தங்கை உள்பட 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் அருகே உள்ள குரும்பகரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு திவ்யா(வயது26), அபிநயா(21) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இதில் திவ்யா தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திவ்யா மற்றும் அவரது தங்கை அபிநயா ஆகியேர் மொபட்டில் காரைக்கால் நோக்கி சென்றனர். காரைக்கால் அருகே உள்ள காஞ்சிபுரம் கோவில்பத்து பகுதியில் சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த திருவாரூரைச் சேர்ந்த விக்னேஷ்(20), மதன்(19) ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக திவ்யாவின் மொபட் மீது மோதினர். இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்த காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால் அருகே உள்ள குரும்பகரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு திவ்யா(வயது26), அபிநயா(21) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இதில் திவ்யா தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திவ்யா மற்றும் அவரது தங்கை அபிநயா ஆகியேர் மொபட்டில் காரைக்கால் நோக்கி சென்றனர். காரைக்கால் அருகே உள்ள காஞ்சிபுரம் கோவில்பத்து பகுதியில் சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த திருவாரூரைச் சேர்ந்த விக்னேஷ்(20), மதன்(19) ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக திவ்யாவின் மொபட் மீது மோதினர். இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்த காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X