என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடரெங்கத்தில் குவிக்கப்பட்ட போலீசார்.
சீர்காழி அருகே தைப்பூச விழாவில் பரபரப்பு
சீர்காழி அருகே தைப்பூச விழாவில் பொது இடத்தில் கொடியேற்ற முயன்ற நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த வடரெங்கம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் முருகப்பெருமானுக்கு தைப்பூச திருவிழா நடத்தப்பட்டது.
வடரெங்கத்தில் திருமுருகப்பெருவிழா என்ற பெயரில் தென்னை
ஓலையால் பந்தல் அமைத்து அதில் முருகப்பெருமானின் படத்தை
வைத்து பூஜை செய்தனர்.
இதில் மாநில சுற்றுச்சூழல் பாசறை துணைத்தலைவர் காசிராமன்,
மாவட்ட செயலாளர் காளிதாசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.
மேற்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான நாம் தமிழர் கட்சியினர்
பங்கேற்றனர்.
முன்னதாக அவர்கள் பொது இடத்தில் நாம் தமிழர் கட்சி கொடியினை ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்த நிலையில் திருந்தனர்.
இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அங்கு வந்த கொள்ளிடம் போலீசார் அரசு அனுமதியின்றி பொது இடத்தில் கட்சிக்கொடி
ஏற்றக்கூடாது என அறிவுறுத்தினர்.
இதனை அடுத்து நாம் தமிழர் கட்சியினர் அங்கு வைத்திருந்த
கொடிமரத்தை எடுத்துச் சென்று நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய
நிர்வாகி சிவக்குமார் என்பவரது இடத்தில் வைத்து அதில் கொடி ஏற்றினர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வடரங்கம் கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story






