search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவள்ளூர் அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது

    திருவள்ளூர் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிப்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் கோனேட்டம்பேட்டை என்ற இடத்தில் வாகன சோதனையில் நேற்று காலை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து மிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 40 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த ஆந்திர மாநிலம் முடி பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிரத்தினம் (வயது 45), பாபு (38) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 லிட்டர் சாராயத்தையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×