search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வ.உ.சி. பூங்கா நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு

    ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது.
    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது.

    ஈரோடு வ.உ.சி.பூங்காவில் உள்ள நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு ஈரோடு மாவட்டம் தாளவாடி, அந்தியூர், கொடுமுடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கர்நாடகா மாநிலத்தின் பல பகுதி, கோவை, நீலகிரி போன்ற பகுதியில் இருந்து காய்கறி வரத்தாகும். 

    பொங்கல்பண்டிகை காரணமாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் காய்கறி அறுவடை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

    இதனால் காய்கறி வரத்து சரிந்துள்ளது. இதன் எதிரொலியாக காய்கறி விலை திடீரென உயர்ந்துள்ளது.

    இது இதுகுறித்து காய்கறி மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-

    ஊட்டியில் இருந்து வர வேண்டிய கேரட், பீட்ரூட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தைக்கு மட்டும், கேரட் 200 கிலோ வரத்தாகும். ஆனால் நேற்று, 118 கிலோ மட்டும் வந்தது. 

    நேற்று முன்தினம் ஒரு கிலோ, 75 ரூபாய்க்கு விற்கப்பட்டு, நேற்று, 85-க்கு விற்கப்பட்டது. தாளவாடியில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததால், நேற்று முன்தினம் ஒரு கிலோ 26 ரூபாய்க்கு விற்ற தக்காளி நேற்று ரூ.35-க்கு விற்பனையானது.

    சின்னவெங்காயம், பெரியவெங்காயம், மிளகாய், பீட்ரூட், கோஸ், காளிபிளவர் போன்றவை மிகக்குறைவாகவே வரத்தானதால், கிலோவுக்கு 10 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.

    கொத்துமல்லி, கறிவேப்பிலை, கீரைவகைகள் போன்றவை சில மூட்டைகள் மட்டுமே வந்தது.

    இன்று அல்லது நாளை முதல் வரத்து அதிக ரிக்கும் என்றும், அதன்பின் விலை குறையும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×