என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மேட்டூர் அருகே நின்ற லாரி மீது பைக் மோதி ரெயில்வே என்ஜினீயர் சாவு
Byமாலை மலர்18 Jan 2022 6:22 AM GMT (Updated: 18 Jan 2022 6:22 AM GMT)
மேட்டூர் அருகே நின்ற லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி ரெயில்வே என்ஜினீயர் பலியானார்.
மேட்டூர்:
ஈரோட்டை சேர்ந்தவர் ஆரோக்கியாராஜ் (வயது50). இவர் மேட்டூர் ரெயில் நிலையத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். குடும்பத்தினர் ஈரோட்டில் வசிப்பதால் ஆரோக்கியராஜ் மட்டும் மேட்டூரில் தங்கி பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் சாம்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு லாரியின் மீது மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ஆரோக்கியராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X