search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    உதவி செய்ய வந்த மாணவியை பலாத்காரம் செய்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உதவி செய்ய வந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திரா நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 55). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர்.

    ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றதும் சொந்த ஊருக்கு திரும்பினார். அதன்பிறகு சுகாதாரத்துறையில் கார் டிரைவர் வேலைக்கு சேர்ந்தார். அந்த வேலையில் அவருக்கு சரியான ஈடுபாடு இல்லாததால் பணியிலிருந்து நின்றுவிட்டார்.

    அதன் பிறகு வீட்டிலேயே சொந்தமாக மாவு அரைக்கும் தொழிலில் ஈடுபட்டார். அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் இவர் வைத்திருக்கக்கூடிய எந்திரத்தில் மாவு அரைத்து சென்றனர். அனைவரிடமும் சேகர் சகஜமாக பழகி உள்ளார்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவர் சேகர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். கடந்த ஆண்டு கொரோனா விடுமுறையில் இருந்த மாணவி சேகர் மாவு மில்லில் அவருக்கு உதவியாக இருந்துள்ளார். மேலும் ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போதும் சேகர் வீட்டிலிருந்து படித்துள்ளார்.

    இந்த நிலையில் மகள் வயதில் இருக்கும் மாணவி மீது சேகர் காம பார்வை வீச தொடங்கினார்.

    அடிக்கடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். இது பற்றி மாணவி வெளியே சொல்ல பயந்தார். ஒருகட்டத்தில் மாணவியை அடைய துடித்த சேகர் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறினார்.

    பள்ளிகள் திறந்ததும் வழக்கம் போல மாணவி பள்ளிக்கு செல்ல தொடங்கினார். இதனை பயன்படுத்திக் கொண்டு சேகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமடக்கினார். மாணவியை பொன்னம்பட்டி கவுண்டன்யா ஆற்றங்கரைக்கு தனியாக அழைத்து சென்றார். அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். பயந்துபோன மாணவி இதை வெளியே சொல்லாமல் இருந்தார்.

    இந்த நிலையில் மாணவி கர்ப்பமானார். அதையும் அவர் பெற்றோரிடம் கூறவில்லை. மாணவிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரது பெற்றோர் குடியாத்தத்தில் உள்ள டாக்டரிடம் மாணவியை அழைத்துச் சென்றனர். அப்போது தான் மாணவி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மாணவியிடம் விசாரித்தபோது முன்னாள் ராணுவ வீரர் சேகர் பாலியல் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானது தெரியவந்தது.

    இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    இதனையடுத்து சேகர் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சேகர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். 

    Next Story
    ×