என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை உத்தரகுளம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 41). இவர் குடும்பத்தோடு ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு தனியறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4½ பவுன் நகை, ரூ.8 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Next Story