search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    கும்மிடிப்பூண்டியில் டீக்கடையின் மேற்கூரையை உடைத்து பணம் திருட்டு

    கும்மிடிப்பூண்டியில் டீக்கடையின் மேற்கூரையை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் முரளிமோகன் (வயது 45). இவர் கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலை சந்திப்பில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு, டீக்கடையின் சிமெண்ட் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கு கல்லா பெட்டியில் இருந்த ரொக்கப் பணம் ரூ.3 ஆயிரத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×