என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வலைகளை பழுது பார்த்த விசைப்படகு மீனவர்கள்
Byமாலை மலர்17 Jan 2022 9:59 AM GMT (Updated: 17 Jan 2022 9:59 AM GMT)
தொண்டி அருகே கடலுக்கு செல்லாமல் இருந்த விசைப்படகு மீனவர்கள் வலைகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே ஆழ்கடல் சென்று மீன்பிடி தொழில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்களின் பகுதியான சி லாஞ்சியடி மற்றும் சோழியக்குடியில் மீனவர்கள் வழக்கமாக சனிக்கிழமை கடலுக்குச் சென்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கரை திரும்புவர்.
வெளிமாநிலங்களுக்கு இறால், நண்டு போன்ற கடல் உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் வணிக நிறுவனங்கள் ஐஸ் பார்களை உடைத்துப்போட்டு பெட்டிகளில் அடைத்து வாகனங்களில் ஏற்றுவார்கள்.
நேற்று முழு ஊரடங்கு என்பதால் வழக்கமான பணி எதுவும் நடைபெறாமல் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ஓய்வில் இருந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி வலைகளை பழுது பார்த்தும், பழுதான வலைகளுக்குப் பதிலாக புதிய வலைகளை பின்னும் பணியிலும் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X