என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலம் மாவட்டத்தில் 4369 மையங்களில் 70 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இல்லம் தேடி கல்வி
Byமாலை மலர்17 Jan 2022 9:56 AM GMT (Updated: 17 Jan 2022 9:56 AM GMT)
சேலம் மாவட்டத்தில் 4369 மையங்களில் 70 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தை அரசு அரசு தொடங்கி உள்ளது
சேலம்:
கொரோனா பரவல் காரணமாக அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை சரிசெய்யும் பொருட்டு தன்னார்வலர்களைக் கொண்டு “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 3-ந்தேதி முதல் “இல்லம் தேடிக் கல்வித் திட்டம்" தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் தற்பொழுது 4,369 மையங்களில் “இல்லம் தேடிக் கல்வித் திட்டம்" தொடங்கப்பட்டுள்ளது. இதில் 2,339 தொடக்க நிலை மையங்களும், 2,030 உயர் தொடக்க நிலை மையங்களும் அடங்கும்.
இந்த மையங்களில் 4,369 பேர் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் 38,774 தொடக்க நிலை மாணவ, மாணவியர்கள், 31,365 உயர் தொடக்க நிலை மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 70,139 மாணவ, மாணவியர்கள் இம்மையங்களில் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.
6 மாத காலத்திற்கு தினசரி குறைந்த பட்சம் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் மாலை நேரங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு மாணவ, மாணவியர்களின் குடியிருப்புப் பகுதிகளிலேயே எளிய முறையில் கற்றல் வாய்ப்புகளை வழங்கி, அன்றாட கற்றல் செயல்பாடுகளில் படிப்படியாக பங்கேற்கச் செய்தலே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கொரோனா பரவல் காரணமாக அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை சரிசெய்யும் பொருட்டு தன்னார்வலர்களைக் கொண்டு “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 3-ந்தேதி முதல் “இல்லம் தேடிக் கல்வித் திட்டம்" தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் தற்பொழுது 4,369 மையங்களில் “இல்லம் தேடிக் கல்வித் திட்டம்" தொடங்கப்பட்டுள்ளது. இதில் 2,339 தொடக்க நிலை மையங்களும், 2,030 உயர் தொடக்க நிலை மையங்களும் அடங்கும்.
இந்த மையங்களில் 4,369 பேர் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் 38,774 தொடக்க நிலை மாணவ, மாணவியர்கள், 31,365 உயர் தொடக்க நிலை மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 70,139 மாணவ, மாணவியர்கள் இம்மையங்களில் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.
6 மாத காலத்திற்கு தினசரி குறைந்த பட்சம் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் மாலை நேரங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு மாணவ, மாணவியர்களின் குடியிருப்புப் பகுதிகளிலேயே எளிய முறையில் கற்றல் வாய்ப்புகளை வழங்கி, அன்றாட கற்றல் செயல்பாடுகளில் படிப்படியாக பங்கேற்கச் செய்தலே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X