என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மருத்துவமனைகள் ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் - சுகாதாரத்துறை உத்தரவு
Byமாலை மலர்17 Jan 2022 9:11 AM GMT (Updated: 17 Jan 2022 9:11 AM GMT)
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான வழிகாட்டுதல் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், உள்நோயாளிகள் பிரிவில், 48 மணி நேரத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான வழிகாட்டுதல் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அனைத்து மருத்துவமனைகளும் தற்போது கைவசம் உள்ள ஆக்சிஜன் சிகிச்சை மற்றும் சேவைகளை உடனே மதிப்பிட வேண்டும். உள்கட்டமைப்பை ஆராய்ந்து, திரவ மருத்துவ ஆக்சிஜன் நிரப்பும் வசதி, வினியோகம் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், 48 மணி நேரத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர் அதை மீண்டும் நிரப்புவதற்கான அமைப்பு குறித்து ஆராய வேண்டும். வென்டிலேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்:
இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு கடைசி நேரத்தில் ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. தற்போது தொற்று வேகமாக பரவி வந்தாலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X