என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தலையில் எலுமிச்சம்பழம் தேய்த்து பரிகாரம் செய்த பெண் மூச்சு திணறி பலி
Byமாலை மலர்17 Jan 2022 4:30 AM GMT (Updated: 17 Jan 2022 4:30 AM GMT)
நெஞ்சு சளி அதிகமாகி மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்ட பெண் மூச்சு திணறி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மரப்பாலம் கோப்பெருந்தேவி வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 72). ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். இவருடைய மகள் பிரதீபா (வயது 39).
இவர் கடந்த 20 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் தினமும் 15 மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இரவில் மாத்திரை சாப்பிட்டு தூங்கும் பிரதீபா தினமும் காலை 11 மணிக்கு தான் எழுந்திரிப்பார்.
இந்நிலையில் பிரதீபா விரைவில் குணமடைய வேண்டி அவர் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு கூறிய பரிகாரத்தின்படி கடந்த சில நாட்களாக பிரதீபா காலையில் எழுந்து தலைக்கு எலுமிச்சம்பழம் தேய்த்து குளித்து வந்துள்ளார்.
இதனால் அவருக்கு நெஞ்சு சளி அதிகமாகி அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று இரவு பிரதீபா எப்போதும் தான் சாப்பிடும் 15 மாத்திரைகளுடன் சளிக்கு 2 மாத்திரைகளை சேர்த்து சாப்பிட்டுள்ளார். மறுநாள் காலை 11 மணி ஆகியும் பிரதீபா எழுந்திருக்கவில்லை. அவரது தந்தை மகள் நன்றாக தூங்குகிறாள் என்று நினைத்து உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு மாலை திரும்பி வந்துள்ளார்.
அப்போது பிரதீபா மூச்சுவிட முடியாமல் சிரமப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரதீபாவை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 15-ந் தேதி அவரை ஈரோட்டில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த பிரதீபா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மரப்பாலம் கோப்பெருந்தேவி வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 72). ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். இவருடைய மகள் பிரதீபா (வயது 39).
இவர் கடந்த 20 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் தினமும் 15 மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இரவில் மாத்திரை சாப்பிட்டு தூங்கும் பிரதீபா தினமும் காலை 11 மணிக்கு தான் எழுந்திரிப்பார்.
இந்நிலையில் பிரதீபா விரைவில் குணமடைய வேண்டி அவர் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு கூறிய பரிகாரத்தின்படி கடந்த சில நாட்களாக பிரதீபா காலையில் எழுந்து தலைக்கு எலுமிச்சம்பழம் தேய்த்து குளித்து வந்துள்ளார்.
இதனால் அவருக்கு நெஞ்சு சளி அதிகமாகி அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று இரவு பிரதீபா எப்போதும் தான் சாப்பிடும் 15 மாத்திரைகளுடன் சளிக்கு 2 மாத்திரைகளை சேர்த்து சாப்பிட்டுள்ளார். மறுநாள் காலை 11 மணி ஆகியும் பிரதீபா எழுந்திருக்கவில்லை. அவரது தந்தை மகள் நன்றாக தூங்குகிறாள் என்று நினைத்து உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு மாலை திரும்பி வந்துள்ளார்.
அப்போது பிரதீபா மூச்சுவிட முடியாமல் சிரமப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரதீபாவை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 15-ந் தேதி அவரை ஈரோட்டில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த பிரதீபா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X