search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    பரங்கிப்பேட்டை அருகே பஸ் மோதி தொழிலாளி பலி

    பரங்கிப்பேட்டை அருகே பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரங்கிப்பேட்டை:

    பரங்கிப்பேட்டை அருகே ஆதிவராகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவருடைய மகன் அருண்குமார் (வயது 21). தொழிலாளி. இவர் ஆதிவராகநல்லூர் கிராமத்தில் இருந்து சிதம்பரம்- கடலூர் செல்லும் சாலையில் 'மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அருண்குமார் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×