என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரணம்
பண்ருட்டி அருகே ஆற்றில் மூழ்கி பலியான வாலிபர் உடல் மீட்பு
பண்ருட்டி அருகே ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள எம்.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வாலிபர் தாமரைசெல்வன் இவர் நேற்று முன்தினம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பகண்டை அணைக்கட்டில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
தகவல் அறிந்ததும் பண்ருட்டி,நெல்லிக்குப்பம் பகுதியிலிருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 நாட்களாக பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலையில் கரையில் ஒதுங்கிய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story