search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் 2 பேர் பலி
    X
    விபத்தில் 2 பேர் பலி

    ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில் 2 பேர் பலி

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துக்களில் வாலிபர் உள்பட 2 பேர் பலியாகினர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது கரைவளைந்தான்பட்டியைச்  சேர்ந்தவர் பசும்பொன்.இவர்  தனது நண்பர் சங்கர நாராயணன் (வயசு 26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். 

    பின்னர் அங்கிருந்து திரும்பும்போது மதுரை மெயின் ரோட்டில் இந்திரா நகர் தனியார் பெட்ரோல் பங்க் அருகே எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் மோதி விபத் துக்குள்ளானார். இந்த விபத்தில் சங்கரநாராயணன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பசும்பொன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி ஆனையூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (52). இவர் வத்திராயிருப்பில் உள்ள தனது மகள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைமந்த ரமேஷ் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து அவரது மகன் ராஜபாண்டி கொடுத்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×