என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதை அடுத்து பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் மற்றொரு தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கின் போது தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் இரவு நேரத்தில் தேவையின்றி வெளியே சுற்றியதாக 20 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார், வருவாய்த் துறையினர் தலா ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் முக கவசம் அணியாமல் வந்த 525 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






