என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீன்வாங்க குவிந்த பொதுமக்கள்-குவித்து வைக்கப்பட்டிருந்த மீன்கள்.
நாகை மீன்பிடி துறைமுகத்தில் விடிய விடிய மீன்விற்பனை
அக்கரைப்பேட்டையில் விடிய விடிய மீன்விற்பனை மும்முரமாக நடந்தது.
நாகப்பட்டினம்:
பொங்கலின் 2-ம் நாளான இன்று முன்னோர்களுக்கு படையலிடுவதற்காக திரளான பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.
மாட்டுப்பொங்கலான இன்று மாலையில் வீட்டு குல தெய்வத்திற்கும், முன்னோர்களுக்கும் மீன், ஆட்டிறைச்சி, கருவாடு, முட்டைகள் வைத்து படையலிடுவது பொதுமக்களின் வழக்கம்.
இதற்காக நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நள்ளிரவு முதல் விடிய, விடிய மீன் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வஞ்சரம், வவ்வால், இறால், சுரும்பு, பாறை, வாலை, செங்காலா நண்டு, ரால், கனவாய் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
வேதாரண்யம், காரைக்கால், திருவாரூர், மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச்சென்றனர்.
வஞ்சிரம்& ரூ.700, ரால் &ரூ.500&700, வெள்ளை வவ்வால் ரூ.800-950,
நண்டு ரூ.650-750, சீலா ரூ.300-350, கருப்புவாவல் ரூ.450 - 550, பாறை ரூ.300-400 விற்பனையாகிறது.
வேதாரண்யம் பகுதியில் பெரும்பாலான மக்கள் மாட்டுப் பொங்கலுக்கு அசைவம் சமைத்து உண்ணுவது வழக்கம்.
இதனால் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை கடற்கரையில் மீன் வாங்க வேதாரண்யம் சுற்றுவட்டார சேர்ந்த பொதுமக்கள் அதிகாலை முதல் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
இதனால் வழக்கத்திற்கு மாறாக மீன் விலை இரு மடங்காக உயர்ந்தது. இருப்பினும் இன்று அசைவம் சமைத்து உண்ண வேண்டும் என்பதால் விலையை பொருட் படுத்தாமல் பொதுமக்கள் காலாமீன், ஷீலாமீன், திருக்கைமீன், வாலை, வாவல் மீன்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.
பொதுமக்கள் தேவை அறிந்து கோடியக்கரை மீனவர்கள் பாம்பனில் இருந்து சுமார் 5 டன் வாலை மீன்களை இறக்குமதி செய்து கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.
இன்று ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்கி சென்றதால் மீன்களுக்கு
நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story






