என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஓய்வு பெற்ற துணை கலெக்டர் வீட்டில் கைவரிசை காட்டிய 4 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஓய்வு பெற்ற துணை கலெக்டர் வீட்டில் கைவரிசை காட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்
    ஈரோடு:

    ஓய்வு பெற்ற துணை கலெக்டர் வீட்டில் கைவரிசை காட்டிய 4  பேரை போலீசார் கைது செய்தனர்

    ஈரோடு மூலப் பாளையம், என்.ஜி.ஜிஓ. நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 70). ஓய்வு பெற்ற துணை கலெக்டர்.
     
    கடந்த 11-ந் தேதி வெள்ளிங்கிரி தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலையில் வீட்டிற்குள் வந்த மர்ம நபர்கள் ஜன்னல் கதவைத் திறந்து குச்சியை வைத்து ரூ.7 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.

    இதுகுறித்து வெள்ளியங்கிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருந்தது. 

    அதில் 4 பேர் வீட்டிற்கு வந்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதனை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
     
    இந்நிலையில் நேற்று தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.

     இதனையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (23), அதே பகுதியை சேர்ந்த சங்கர் (19), ஈரோடு மாவட்டம் முள்ளாம் பரப்பு பகுதியைச் சேர்ந்த பிரபு (23), மூலபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் (19) என்பதும், இவர்கள் 4  பேரும் சேர்ந்து தான் ஓய்வு பெற்ற துணை கலெக்டர் வெள்ளியங்கிரி வீட்டில் ரூ.7 ஆயிரம் பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டனர்.  மேலும் இவர்கள் ஓட்டி வந்த 2 மோட்டார் சைக்கிளும் திருடியது என தெரியவந்தது. 

    இதனையடுத்து போலீசார் 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 
    Next Story
    ×