என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிராமங்களில் களைகட்டிய பொங்கல்: விவசாயிகள் உற்சாக கொண்டாட்டம்
Byமாலை மலர்15 Jan 2022 9:18 AM GMT (Updated: 15 Jan 2022 9:18 AM GMT)
ஈரோடு மாவட்ட கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பொங்கலையொட்டி ஈரோட்டில் வீரவிளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டது. இன்று மாட்டுப்பொங்கலை யொட்டி விவசாயிகள் பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடினர்.
பொங்கல் பண்டிகையின் 3-வது நாளான இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. கிராமப்புறங்களில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் காலை முதலே களை கட்டி காணப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் காவிரி, பவானி, கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி அரக்கன்கோட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் கால்நடைகளை குளிப்பாட்டி அதன் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டியும், பழைய கயிறுகளை மாற்றி மாடுகளை அலங்கரித்திருந்தனர்.
உழவு தொழிலுக்கும், உழவு தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாடுகளுக்கு பொங்கல் வைத்து கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவைகளை படையலிட்டு வழிபட்டனர்.
இந்தாண்டு பரவலாக மழை பெய்திருந்ததாலும், அனைத்து பாசனங்களுக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும், மாவட்டத்தின் எல்லா பகுதிகளிலும் பசுமை படர்ந்து உள்ளதால் பல ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழாவை விவசாயிகள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X