என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஈரோடு கொங்காலம்மன் கோவில் நடை சாத்தப்பட்டு உள்ளது. வெளியே நின்று பக்தர்கள்
கோவில் முன்பு நின்று சாமி தரிசனம் செய்த பொதுமக்கள்
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடு த்துள்ளதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. கட்டுப்பாடுகளில் மிக முக்கியமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பொதுமக்கள் நேரடியாக சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடு த்துள்ளதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. கட்டுப்பாடுகளில் மிக முக்கியமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பொதுமக்கள் நேரடியாக சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. தற்போது தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்நிலையில் பொங்கல்பண்டிகையையொட்டி கோவில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் கடந்த 14-ந் தேதி முதல் வரும் 18-ந் தேதி வரை 5 நாட்களுக்கு கோவில்களில் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் 18-ந் தேதி தைப்பூசம் என்பதால் அன்றும் வழிபட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாநகரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன், கோட்டைபெருமாள், கருங்கல்பாளையம் மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் போன்ற கோவில்களில் இன்று காலை பொதுமக்கள் வெளியே நின்று சாமி கும்பிட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று காலை வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றன. ஆனால் பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்படவில்லை. இருந்தாலும் நூற்றுக்கணக்கான மக்கள் கோவில் வெளியே நின்று அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
இதேப்போல் சென்னிமலை முருகன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன், குருநாதர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர், பெருமாள்மலை கோவில், பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், செல்லாண்டி அம்மன், தேவபுரம் கருமாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், கோபி பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், பச்சைமலை பவளமலை முருகன் கோவில், சாரதா மாரியம்மன் கோவில் போன்ற கோவில்கள் முன்பு இன்று காலை வழக்கம் போல் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
கோவில்களில் வழக்கம்போல் ஆகம விதிபடி பூஜைகள் நடைபெற்றன. கோவில்கள் முன்பு இது குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்தன.
Next Story






