என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோழி குஞ்சு பொரிப்பகத்திற்கு பணியாளர்கள் நியமனம் - அரசுக்கு கருத்துரு அனுப்பிவைப்பு
Byமாலை மலர்13 Jan 2022 5:09 AM GMT (Updated: 13 Jan 2022 5:09 AM GMT)
குஞ்சு பொரிப்பகத்தில் கால்நடை ஆய்வாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
உடுமலை:
கால்நடை பராமரிப்புத்துறையால் உடுமலை அடுத்த குறிச்சிக்கோட்டையில் குஞ்சு பொரிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் மட்டுமே பொரிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட ‘போல்ட்ரி ரிசர்ச் ஸ்டேஷனில்’ இருந்து கருமுட்டைகள் கொண்டு வரப்பட்டு அடைகாப்பான்கள் வாயிலாக கோழிக்குஞ்சுகள் பொரிக்கப்படுகின்றன.
ஆனால் பணியாளர்கள் பற்றாக்குறையால் கடந்த சில மாதங்களாக முட்டைகள் அடைக்காக்கப்படுவதில்லை. குஞ்சுகள் உருவாக்கம் தடைபட்டுள்ளதால் பயனாளிகள் பலரும் வருவாய் ஈட்ட முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஜெயராம் கூறுகையில்:
குஞ்சு பொரிப்பகத்தில் கால்நடை ஆய்வாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. போதிய பணியாளர்களை நியமிக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளன.
பணியாளர்கள் நியமனம் செய்யப்படவும், மீண்டும் குஞ்சுகள் உருவாக்கம் செய்யப்படும். கொரோனா பரவல் காரணமாக பணியாளர்கள் நியமனம் தடைபட்டுள்ளது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X