search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுவையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி- தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை எட்டுகிறது

    புதுவையில் கொரோனா தொற்று நாள்தோறும் வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

    புதுவையில் நேற்று 4 ஆயிரத்து 387 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக 893 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 801, காரைக்காலில் 60, ஏனாமில் 10, மாகியில் 22 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 112, காரைக்காலில் 14, மாகியில் 11 பேர் என 137 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 20, காரைக்காலில் 8, மாகியில்16 பேர் என 44 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 673 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    புதுவையில் 2 ஆயிரத்து 576, காரைக்காலில் 402, ஏனாமில் 14, மாகியில் 74 பேர் என 3 ஆயிரத்து 66 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    புதுவை மாநிலத்தில் இப்போது 3 ஆயிரத்து 203 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவையில் ஒருவர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 883 ஆக உள்ளது.

    புதுவையில் 2-வது தவணை உட்பட 14 லட்சத்து 85 ஆயிரத்து 255 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    புதுவையில் கொரோனா தொற்று நாள்தோறும் வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


    Next Story
    ×