search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவிகள்
    X
    பள்ளி மாணவிகள்

    பொங்கல் பண்டிகை- புதுவையில் பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்பட்டது. 10 முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இயங்கி வரும் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×