search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டம்
    X
    கூட்டம்

    தாம்பரம் கோட்டத்தில் 13-ந்தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

    தாம்பரம் கோட்டத்திற்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு  மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரம் கோட்டத்திற்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் காலை 11 மணிக்கு தாம்பரம் செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ, புதுதாங்கல் துணை மின் நிலைய வளாகம், 1-வது தளம், முல்லை நகர், மேற்கு தாம்பரம் சென்னை- 45 என்ற அலுவலக முகவரியில் நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×