என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் இணைப்பு சிறப்பு முகாம் நடந்தது.
    X
    மின் இணைப்பு சிறப்பு முகாம் நடந்தது.

    விவசாய மின் இணைப்பு சிறப்பு முகாம்

    சீர்காழியில் விவசாய மின் இணைப்பு சிறப்பு முகாம் நடந்தது.
    சீர்காழி:

    சீர்காழி தென்பாதியில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான மின் கோட்ட அலுவலகத்தில் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவது தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. 

    முகாமிற்கு செயற்பொறியாளர் (பொறுப்பு) விஸ்வநாதன் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் விஜயபாரதி, முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் சீர்காழி மின் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1.4.2003 முதல் 31.3.13 வரை மின் இணைப்பு வேண்டி பதிவு செய்துள்ள விவசாயிகளின் பட்டா, சிட்டா, வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து தகுதி உள்ள 30-க்கும் மேற்பட்ட விவசாய மின் இணைப்பு பெறுவதற்கான ஆணையை விசுவநாதன் வழங்கி பேசுகையில், நாளை மயிலாடுதுறை தாலுக்காவிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
     
    இதில் அந்தந்த பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்றார். முகாமில் பொறியாளர்கள் ரமேஷ்குமார், ரங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×