என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொரோனா வைரஸ்
தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா உறுதி
தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
தாம்பரம்:
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி விடுதி மாணவர்கள், 2 பிரபல துணிக்கடை ஊழியர்கள், தாம்பரத்தில் உள்ள கல்லூரி விடுதி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சியில் பணிபுரியும் 36 ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதியானது. அதன்படி தாம்பரம் மாநகராட்சி அலுவலக ஊழியர்கள்-14, மாநகராட்சிக்கு உட்பட்ட அலுவலகங்களான பம்மலில் 17 பேர், செம்பாக்கத்தில்-5 பேர் என 36 ஊழியர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் மாநகராட்சி பகுதிகளில் நேற்று மட்டும் 237 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 940 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி விடுதி மாணவர்கள், 2 பிரபல துணிக்கடை ஊழியர்கள், தாம்பரத்தில் உள்ள கல்லூரி விடுதி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சியில் பணிபுரியும் 36 ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதியானது. அதன்படி தாம்பரம் மாநகராட்சி அலுவலக ஊழியர்கள்-14, மாநகராட்சிக்கு உட்பட்ட அலுவலகங்களான பம்மலில் 17 பேர், செம்பாக்கத்தில்-5 பேர் என 36 ஊழியர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் மாநகராட்சி பகுதிகளில் நேற்று மட்டும் 237 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 940 ஆக அதிகரித்துள்ளது.
Next Story






