என் மலர்
உள்ளூர் செய்திகள்

விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ள தேங்காய்கள்
தேங்காய் விலை வீழ்ச்சி
தேனி மாவட்டத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்ததால் கடமலை மயிலை ஒன்றிய கிராமங்களில் தேங்காய் உற்பத்தி அதிகளவில் காணப்படுகிறது. தற்போது கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தேங்காய் இறக்குமதி அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இந்த காரணங்களால் கடமலை மயிலை ஒன்றியத்தில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ரூ.15 வரை விற்பனையாகி வந்த தேங்காய் தற்போது ரூ.9 வரை மட்டுமே விற்பனையாகிறது.
இதனால் விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தவிர வெளிமாநில இறக்குமதி காரணமாக கடமலை மயிலை ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் குடோன்களில் தேங்காய்கள் அதிக அளவில் தேக்கமடைந்து காணப்படுகிறது.
எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து வெளி மாநிலங்களில் இருந்து தேங்காய் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் தற்போது பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்ததால் கடமலை மயிலை ஒன்றிய கிராமங்களில் தேங்காய் உற்பத்தி அதிகளவில் காணப்படுகிறது. தற்போது கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தேங்காய் இறக்குமதி அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இந்த காரணங்களால் கடமலை மயிலை ஒன்றியத்தில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ரூ.15 வரை விற்பனையாகி வந்த தேங்காய் தற்போது ரூ.9 வரை மட்டுமே விற்பனையாகிறது.
இதனால் விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தவிர வெளிமாநில இறக்குமதி காரணமாக கடமலை மயிலை ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் குடோன்களில் தேங்காய்கள் அதிக அளவில் தேக்கமடைந்து காணப்படுகிறது.
எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து வெளி மாநிலங்களில் இருந்து தேங்காய் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் தற்போது பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
Next Story






