என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழைநீர் வீணாகாதபடி கால்வாய்கள்
    X
    மழைநீர் வீணாகாதபடி கால்வாய்கள்

    நீர் மேலாண்மை தென் மண்டலம் சார்பில் மத்திய அரசின் சிறந்த ஊராட்சியாக வெள்ளப்புத்தூர் ஊராட்சி தேர்வு

    ஊராட்சியில் உள்ள அனைத்து பணிகளும் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு மழை நீர் கால்வாய், ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு சாலையில் மரம் செடிகள் நடப்பட்டு விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரம் உள்ள ஊராட்சியாக இந்த ஊராட்சி அமைந்துள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் உள்ளது வெள்ளப்புத்தூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் அருந்ததி பாளையம், இருளர் பழங்குடி காலனி, வெள்ளப்புத்தூர், பாலக்காடு மற்றும் சுண்ணாம்பு மேடு உள்பட பத்து குக்கிராமங்கள் உள்ளன.

    434 வீடுகள் 1454 மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். நீர் மேலாண்மை துறை மூலம் மத்திய அரசு தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் உள்ள வெள்ளப்புத்தூர் ஊராட்சி நீர் மேலாண்மை திட்டத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் மூலம் ஊராட்சியில் உள்ள 100 பேருக்கு வேலையை வழங்கி இதன் மூலம் உடையார்குளம், மாரியம்மன் குளம், கங்கையம்மன் குளம், வண்ணான் குளம், கண்ணியம்மன் குளம் மற்றும் லட்சுமணன் குளம் ஆகிய குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தி குளத்தின் கரைகளை உயர்த்தி உள்ளனர்.

    மழை நீர் வருவாய் கால்வாய்களை சுத்தம் செய்து மழை நீர் வீணாகாமல் குளத்தில் சென்று சேரும் விதத்தில் மழை நீர் கால்வாய்களை அமைத்துள்ளனர். இந்த ஊராட்சியில் சிற்றேரி, பெரியஏரி என இரண்டு ஏரிகள் முழு கொள்ளவுடன் காணப்படுகிறது.

    இதனால் இப்பகுதியில் உள்ள 10 க்கும் மேற்பட்ட கிணற்றில் கோடைகாலங்களில் நீர் வற்றாமல் இருக்கும். இதனால் விவசாயம் செழிபாக இருக்கும் என்று அப்பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயக்குமார் கூறுகிறார்.

    இந்த பகுதியில் வீணாகும் தண்ணீரை பயன்படுத்தி சாலையில் மரங்களும், காலியாக உள்ள ஊராட்சி இடங்களில் செடிகளை வளர்த்து வருவதாகவும் கூறுகின்றனர். மழை நீர் வீனாகாதவாரு ஏரி மற்றும் குளங்களுக்கு சென்றடைகின்ற வகையில் மழை நீர் கால்வாயை கிராம மக்கள் அமைத்துள்ளனர்.

    ஊராட்சியில் உள்ள அனைத்து பணிகளும் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு மழை நீர் கால்வாய், ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு சாலையில் மரம் செடிகள் நடப்பட்டு விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரம் உள்ள ஊராட்சியாக இந்த ஊராட்சி அமைந்துள்ளது.

    இதனால் மத்திய அரசின் நீர் மேலாண்மை துறை மூலம் தென் மாநிலத்தில் தமிழ் நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம் ஒன்றியம் வெள்ளப்புத்தூர் ஊராட்சி நீர் மேலாண்மை துறை சிறந்து விளங்கி தேர்வு செய்யப்பட்டதற்கு கிராம மக்கள் மகிழ்ச்சி அடைவதாக அப்பகுதி முன்னாள் இந்நாள் தலைவர்களும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களும் கூறுகின்றனர்.

    Next Story
    ×