என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்தியமங்கலத்தில் முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
    X
    சத்தியமங்கலத்தில் முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

    சத்தியமங்கலத்தில் முககவசம் அணியாத 200 பேருக்கு அபராதம்

    சத்தியமங்கலத்தில் முககவசம் அணியாமல் வந்த 200 பேருக்கு போலீசார் அபராதம் வித்தனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலத்தில் முககவசம் அணியாமல் வந்த 200 பேருக்கு போலீசார் அபராதம் வித்தனர்.

    கொரோனா பரவல் காரணமாக இன்று முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி சத்தியமங்கலம் பஸ் நிலையம், பழைய மார்க்கெட் பகுதி, வடக்குபேட்டை, கோட்டு வீராம்பாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
     
    மேலும் சத்தியமங்கலம்- ஈரோடு ரோடு, பண்ணாரி ரோடு மற்றும் முக்கிய பகுதிகளில் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு  ஜெயபாலன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலம் பகுதியில் போலீசார் அந்த வழியாக வந்தவர்களை பிடித்து விசா ரணை நடத்தினர். இதில் விதிமுறைகள் மீறி தேவையில்லாமல் சுற்றியவர்கள் மற்றும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    சத்தியமங்கலம் பகுதியில் இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரத்தில் முககவசம் அணியாத 200 பேரிடம் தலா ரூ.200 வீதம் ரூ.40 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் தேவையில்லாமல் சுற்றியவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதே போல் கோபி பஸ்நிலையம், மார்க்கெட் பகுதி, ஈரோடுரோடு, மொடச்சூர் ரோடு, கவுந்தப்பாடி 4 ரோடு, சத்தியமங்கலம் ரோடு, பஸ் நிலையம் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளியில் சுற்றியவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×