என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    போச்சம்பள்ளி அருகே அனுமதியின்றி மண் கடத்திய லாரி டிரைவர் கைது

    போச்சம்பள்ளி அருகே அனுமதியின்றி மண் கடத்திய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    மத்தூர்:

    போச்சம்பள்ளி தாசில்தார் இளங்கோ நேற்று தருமபுரி, திருப்பத்தூர் சாலையில் ரோந்து பணியில் ஆய்வு மேற்கொண்டனர். 

    அப்போது அந்த வழியே வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ததில் அரசு அனுமதியின்றி 3.5 யூனிட் எம்.சாண்ட் மணலை கடத்தியது தெரியவந்தது. 

    இதனையடுத்து தாசில்தார் இளங்கோ போச்சம்பள்ளி   போலீஸ் நிலையத்தில் எம்.சாண்ட் கடத்தப்பட்ட டிப்பர் லாரியை ஒப்படைத்தார். 

    இது குறித்து இன்ஸ்பெக்டர் பிரபாவதி  விசாரித்தார். இதில்  லாரி டிரைவர் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சப்பாணிப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 25) என்பவர் போச்சம்பள்ளி பகுதிக்கு எம்.சாண்ட் மணலை டிப்பர் லாரியில் அனுமதியின்றி கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து டிரைவர் செல்வராஜை  போலீசார் கைது செய்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×