search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    இரும்பு கட்டிங் மெஷினை திருடிய 2 பேர் கைது

    சேலத்தில் இரும்பு கட்டிங் மெஷினை திருடிய 2 பே ர்கைது செய்யப்பட்டனர்.
    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள காமநாயக்கன்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 44). இவர் அதே பகுதி புவனேஸ்வரி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

    சம்பவத்தன்று அந்த கட்டிடத்தில் இருந்த 30 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கட்டிங் மெஷினை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து கந்தசாமி இரும்பாலை போலீசில் புகார் செய்தார்.

     போலீசார் வழக்கு பதிந்து ஜாகிர் அம்மாபாளையம் எட்டுகுட்டை தெரு மணிகண்டன் (30), சேலம் டவுன் பட்டகோயில் குமரன் தெரு மாரியப்பன் (43) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.  
    Next Story
    ×