என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
ஓசூரில் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
ஓசூரில் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த சானமாவு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட் சுப்பிரமணியம் (வயது 57), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை ஓசூர் அண்ணாநகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த நபர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 700 ரூபாயை பறித்து சென்றார். இது குறித்து அவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டவர் உத்தனப்பள்ளியை அடுத்த கன்னசந்திரம் பகுதியை சேர்ந்த முரளி (40) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கைதான முரளி மீது ஏற்கனவே அட்கோ, மத்திகிரி, உத்தனப்பள்ளி, போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






