என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கின் போது வ.உ.சி. காய்கறி மார்க்கெட் இயங்காது
ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு காரணமாக ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட் செயல்படாது என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கின் போது வ.உ.சி. காய்கறி மார்க்கெட் இயங்காது
ஈரோடு:
ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு காரணமாக ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட் செயல்படாது என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் கொரோனா தாக்கம் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் செயல்பட்டு வருகிறது.
இங்கே 730-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகளும். 100-க்கும் மேற்பட்ட பழ கடைகளும் இயங்கி வருகின்றன. இரவு முழுவதும் மொத்த வியாபாரமும், காலையில் சில்லறை வியாபாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அத்துடன் ஒமைக்ரான் தொற்றும் அதிகமாக பரவி வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது கடைகள் வணிக நிறுவனங்கள் அடைக்கப் பட்டிருக்கும்.
ஆனால் அதேநேரம் அத்தியாவசிய பொருட்க ளான பால், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், ஆஸ்பத்திரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது ஈரோடு வ.உ.சி பகுதியில் இங்கும் நேதாஜி காய்கறி மார்க்கெட் அன்று ஒரு நாள் முழுவதும் இயங்காது என ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதேபோல் மற்ற காய்கறி மார்க்கெட்டுகளும் இயங்காது என அவர் தெரிவித்துள்ளார்.
Next Story






