என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகை திருட்டு

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சுண்ணாம்பட்டி, கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52) , லாரி டிரைவரான இவரும் மனைவி அம்சா ஆகிய இருவரும் நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றுள்ளனர்.

    மீண்டும் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் ஆகியவற்றை  மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து மத்தூர் காவல் நிலையத்திற்கு வீட்டின் உரிமையாளர் முருகேசன் புகார் அளித்தார். அதன் பேரில் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×