என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குப்பம் வரும் கிருஷ்ணா நீரில் 2 டி.எம்.சி. தண்ணீரை பாலாற்றில் திறந்துவிட வேண்டும்- தமிழக விவசாயிகள் மனு
Byமாலை மலர்7 Jan 2022 9:17 AM GMT (Updated: 7 Jan 2022 9:17 AM GMT)
அந்திரிநிவா திட்டத்தில் குப்பம் வரும் கிருஷ்ணா நீரில் 2 டி.எம்.சி. தண்ணீரை பாலாற்றில் திறந்துவிட வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவிடம் தமிழக விவசாயிகள் மனு அளித்தனர்.
வாணியம்பாடி:
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தில் தனது தொகுதி குப்பத்தில் 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து இருந்து சாலை மார்க்கமாக ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி வழியாக வாணியம்பாடிக்கு வந்தார். அவருக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் வரவேற்பளித்தனர்.
அப்போது திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அனைத்து விவசாய சங்கம், பாலாறு பாதுகாப்பு சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
கடந்த முறை சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட கிருஷ்ணா நதியில் இருந்து 3 டிஎம்சி நீரை கொண்டு வந்து குப்பம் தொகுதியில் அந்திரி நிவா திட்டத்தில் கால்வாய் வெட்டப்பட்டு நீரை தேக்கி வைக்க தயாராக உள்ளது.
அதில் 2 டி.எம்.சி. நீரை பாலாற்றில் விட வேண்டும் வாணியம்பாடியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் குப்பம் தொகுதியில் உள்ள விஜிலாபுரம் என்ற இடத்தை தேர்வு செய்து சர்வதேச விமான நிலையம் அமைக்க ரூ.98 கோடி நிதி ஒதுக்கி 1200 ஏக்கர் நிலத்தை வாங்கி தற்போது கிடப்பில் உள்ள அந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தால் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலம் மக்களுக்கு வெளிநாடு பயணத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சித்தூர் மாவட்டம், குப்பம் பகுதியில் அமைந்துள்ள திராவிட பல்கலைக்கழகத்தில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர கோரிக்கை மனு ஆசிரியர் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது, திராவிட பல்கலைக்கழகத்தில் தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை அதிகரித்து தரவேண்டும். தமிழ் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலம் திராவிட பல்கலைக்கழகத்துக்கு வருவதற்க வசதியாக கூடுதல் பஸ் இயக்க வேண்டும், திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தடையின்றி செயல்பட ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தில் தனது தொகுதி குப்பத்தில் 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து இருந்து சாலை மார்க்கமாக ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி வழியாக வாணியம்பாடிக்கு வந்தார். அவருக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் வரவேற்பளித்தனர்.
அப்போது திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அனைத்து விவசாய சங்கம், பாலாறு பாதுகாப்பு சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
கடந்த முறை சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட கிருஷ்ணா நதியில் இருந்து 3 டிஎம்சி நீரை கொண்டு வந்து குப்பம் தொகுதியில் அந்திரி நிவா திட்டத்தில் கால்வாய் வெட்டப்பட்டு நீரை தேக்கி வைக்க தயாராக உள்ளது.
அதில் 2 டி.எம்.சி. நீரை பாலாற்றில் விட வேண்டும் வாணியம்பாடியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் குப்பம் தொகுதியில் உள்ள விஜிலாபுரம் என்ற இடத்தை தேர்வு செய்து சர்வதேச விமான நிலையம் அமைக்க ரூ.98 கோடி நிதி ஒதுக்கி 1200 ஏக்கர் நிலத்தை வாங்கி தற்போது கிடப்பில் உள்ள அந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தால் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலம் மக்களுக்கு வெளிநாடு பயணத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சித்தூர் மாவட்டம், குப்பம் பகுதியில் அமைந்துள்ள திராவிட பல்கலைக்கழகத்தில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர கோரிக்கை மனு ஆசிரியர் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது, திராவிட பல்கலைக்கழகத்தில் தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை அதிகரித்து தரவேண்டும். தமிழ் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலம் திராவிட பல்கலைக்கழகத்துக்கு வருவதற்க வசதியாக கூடுதல் பஸ் இயக்க வேண்டும், திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தடையின்றி செயல்பட ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X