என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மினி வேனில் கடத்தி வந்த போதை பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது
Byமாலை மலர்7 Jan 2022 5:50 AM GMT (Updated: 7 Jan 2022 5:50 AM GMT)
புதுவையில் மினி வேனில் கடத்தி வந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை போலீசார் நேற்று இரவு புவன்கரே வீதி- வினோபா வீதி சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த ஒரு மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அதில் 2 பார்சல்கள் இருந்தன. அந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது, அதில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட ஏராளமான பாக்கெட்டுகளில் போதை பொருட்கள் இருந்தன.
இதையடுத்து மினி வேனை ஓட்டி வந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் உருளையன் பேட்டை ராஜா நகர் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜெயராஜ் (வயது 42) என்பது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் இந்த போதை பொருட்கள் பிருந்தாவனத்தை சேர்ந்த முகேஷ் (37) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. ஆனால், இதற்கான எந்த ஆவணங்களும் டிரைவரிடம் இல்லை.
இந்த போதை பொருட்களை முகேஷ் வீட்டில் வைத்து புதுவையில் உள்ள கடை வியாபாரிகளுக்கு சப்ளை செய்ய கொண்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்திய மினி வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போதை பொருட்களை கடத்தி வந்த மினி வேன் டிரைவர் ஜெயராஜ் மற்றும் முகேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
உருளையன்பேட்டை போலீசார் நேற்று இரவு புவன்கரே வீதி- வினோபா வீதி சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த ஒரு மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அதில் 2 பார்சல்கள் இருந்தன. அந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது, அதில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட ஏராளமான பாக்கெட்டுகளில் போதை பொருட்கள் இருந்தன.
இதையடுத்து மினி வேனை ஓட்டி வந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் உருளையன் பேட்டை ராஜா நகர் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜெயராஜ் (வயது 42) என்பது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் இந்த போதை பொருட்கள் பிருந்தாவனத்தை சேர்ந்த முகேஷ் (37) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. ஆனால், இதற்கான எந்த ஆவணங்களும் டிரைவரிடம் இல்லை.
இந்த போதை பொருட்களை முகேஷ் வீட்டில் வைத்து புதுவையில் உள்ள கடை வியாபாரிகளுக்கு சப்ளை செய்ய கொண்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்திய மினி வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போதை பொருட்களை கடத்தி வந்த மினி வேன் டிரைவர் ஜெயராஜ் மற்றும் முகேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X