search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஒரே நாளில் முககவசம் அணியாத 1000 பேருக்கு அபராதம்

    ஈரோடு மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    ஈரோடு:

    கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.  இந்தியாவிலும் ஊடுருவி தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தாக்கம் இருந்து வருகிறது. 

    இந்நிலையில் கொரோனா அவ்வப்போது உருமாற்றம் அடைந்து மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தி வருகிறது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

    பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரதுறையினர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

    பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும்.பொதுஇடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதனை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. முககவசம் அணியாமல் வந்தால் ரூ.200, பொது இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. 

    சுகாதாரத்துறையினர், மாநகராட்சிஅலுவலர்கள், வருவாய்த் துறையினர், போலீசார் ஆகியோர் ஒன்றிணைந்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் இயல்பு திரும்பியதும் மக்கள் மீண்டும் முககவசம் அணியும் பழக்கத்தை மறந்தனர்.

    இந்நிலையில் தற்போது உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று மீண்டும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. 

    தமிழகத்தில் இதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி கொரோனா தினசரி பாதிப்பும் உயர்ந்து வருகிறது. 

    இதையடுத்து மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. முககவசம் கண்டிப்பாக அணிந்துவர வலியுறுத்தப்பட்டது. 

    ஆனால் இதை பெரும்பாலானோர் காதில் வாங்கிக் கொள்வதாக தெரியவில்லை. பொது இடங்களிலும் சமூக இடைவெளி கேள்விக் குறியாகியுள்ளது. 

    இதையடுத்து போலீசார், மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறையினர் மீண்டும் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை  தீவிரப்படுத்தி  வருகின்றனர். 

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முககவசம் அணியாமல் வந்த 1000 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதேபோல் சத்தியமங்கலம், அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, ஈரோடு மாநகர் பகுதி என மாவட்டம் முழுவதும் போலீசார் முககவசம் அணியாமல் வந்த 1000 பேருக்கு  தலா ரூ.200 அபராதம் விதித்தனர். 

    இதன் மூலம் ரூ.2 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×