என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
கடலூரில் மாமனாரை தாக்கிய டிரைவர் கைது
கடலூரில் மாமனாரை தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் உண்ணாமலைச்செட்டி சாவடியை சேர்ந்தவர் முனுசாமி மகன் ராஜாராமன் (வயது 35). டிரைவர். இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தையை பார்ப்பதற்காக சம்பவத்தன்று ராஜாராமன் தனது மாமனார் ராமலிங்கம் வீடான வெளிசெம்மண்டலத்திற்கு சென்றார். அங்கு அந்த குழந்தையை ராமலிங்கம் வைத்திருந்தார். அவர் ராஜாராமனை பார்த்ததும் 9 மாதமாக மனைவியை வீட்டில் வைத்து சரியாக குடும்பம் நடத்த முடியவில்லை. எதற்காக குழந்தையை பார்க்க வந்தாய்? என்று கேட்டதாக தெரிகிறது. இதில் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜாராமன் ராமலிங்கத்தை ஆபாசமாக திட்டி தாக்கியதாக தெரிகிறது. இது பற்றி மாமியார் லதா கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை கைது செய்தனர்.
Next Story






