என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை
புதுப்பேட்டை அருகே 2 கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளை
புதுப்பேட்டை அருகே 2 கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுப்பேட்டை:
பண்ருட்டி அருகே மணம்தவிழ்ந்தபுத்தூர் கிராம ஏரிக்கரை பகுதியில் சிவன் கோவில் மற்றும் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த 2 கோவில்களுக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்த மர்மநபர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்களை உடைத்து, அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். 2 கோவில்களில் இருந்த உண்டியல்களை உடைக்கப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் இதுபற்றி நேற்று காலை புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற கோவில்களை நேரில் பார்வையிட்டதோடு, உண்டியல்களை உடைத்து பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






