என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
தேன்கனிக்கோட்டை அருகே போலி டாக்டர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சி, ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் முருகன், சந்தனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மாரேஸ் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் தேன்கனிக்கோட்டை அருகே திப்பசந்திரத்தில் உள்ள மருந்து கடையில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த நீலஞ்சனூரை சேர்ந்த விஜய் (வயது 24) மருந்து கடை பின்புறம் கிளினிக் நடத்தியது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, எலட்ரோபதி படித்து விட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கிளினிக்கிற்கும் சீல் வைத்தனர்.
Next Story






