search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை திருமணம்
    X
    குழந்தை திருமணம்

    திருக்கோவிலூர் அருகே குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

    திருக்கோவிலூர் அருகே பாலியல் ரீதியான பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து 1098, 181 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலபந்தல் போலீஸ் நிலையம் சார்பில் பெண் குழந்தைகள் திருமணம் தடு்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருக்கோவிலூர் அருகே உள்ள தோப்புக்கச்சேரி கிராமத்தில் நடைபெற்றது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் ஏட்டுகள் கோகிலா, பிரபு, அமலா ஆகியோர் பெண்குழந்தைகள் திருமணம் தடு்ப்பு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் குழந்தைகள் தேவையில்லாமல் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க பெற்றோர்கள் கண்காணிக்கவேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    மேலும் பாலியல் ரீதியான பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து 1098, 181 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து எடையூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    Next Story
    ×