என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருக்கோவிலூர் அருகே குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
Byமாலை மலர்3 Jan 2022 12:07 PM GMT (Updated: 3 Jan 2022 12:07 PM GMT)
திருக்கோவிலூர் அருகே பாலியல் ரீதியான பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து 1098, 181 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலபந்தல் போலீஸ் நிலையம் சார்பில் பெண் குழந்தைகள் திருமணம் தடு்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருக்கோவிலூர் அருகே உள்ள தோப்புக்கச்சேரி கிராமத்தில் நடைபெற்றது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் ஏட்டுகள் கோகிலா, பிரபு, அமலா ஆகியோர் பெண்குழந்தைகள் திருமணம் தடு்ப்பு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் குழந்தைகள் தேவையில்லாமல் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க பெற்றோர்கள் கண்காணிக்கவேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் பாலியல் ரீதியான பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து 1098, 181 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து எடையூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X