என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவில்களில் தரிசன கட்டணம் வசூல் செய்வதை தடை செய்ய வேண்டும் - இந்து முன்னேற்ற கழக கூட்டத்தில் தீர்மானம்
Byமாலை மலர்3 Jan 2022 7:48 AM GMT (Updated: 3 Jan 2022 7:48 AM GMT)
அனைத்து பள்ளிகளிலும் பகவத் கீதையை பாடமாக்க வேண்டும். பள்ளிகளில் பாலியல் பிரச்சினைகளை தவிர்க்க வேண்டும்.
திருப்பூர்:
இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா, புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு விழா மற்றும் அமைப்பின் கொள்கை விளக்க விழா நடைபெற்றது. விழாவில் மாநில செயலாளர் கே.ஹரிகிருஷ்ணன் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் கே.கோபிநாத் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் கட்சியின் புதிய பொறுப்பாளர்களையும் அறிவித்தார்.
இதில் மாநில பொறுப்பாளர் தாமோதரன், மாவட்ட பொறுப்பாளர்கள் ஸ்ரீகாந்த், ஹரி, விஜயகுமார், உதயகுமார்,மாநகர செயலாளர் சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் பகவத் கீதையை பாடமாக்க வேண்டும். பள்ளிகளில் பாலியல் பிரச்சினைகளை தவிர்க்க வேண்டும். ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
தமிழகத்திலுள்ள அனைத்து கோவில்களில் தரிசனத்திற்கு கட்டணம் வசூல் செய்வதை தடை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X