என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
8 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி
செங்கம் அருகே 8 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பரிதாபமாக இறந்தான்.
செங்கம்:
செங்கம் அடுத்த நாகப்பாடியை சேர்ந்த ஏழுமலை (37) அவரது மனைவியுடன் திருப்பூரில் பணி செய்து வருகிறார்.
இவர்களது மகன் பிரதீஷ் (8) நாகப்பாடியில் உள்ள பள்ளியில் 4&ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஏழுமலை திருப்பூரில் பணி செய்து வருவதால் பிரதீஷை அவரது பாட்டி பானுமதியிடம் (65) விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பானுமதி கூலி வேலைக்காக சென்றார்.
அப்போது பானுமதி உடன் சென்ற பிரதீஷ் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு விவசாய நிலத்தின் வழியாக வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விவசாய கிணற்றில் தவறி விழுந்தார்.
இதில் பிரதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரதீஷின் உடலை மீட்டு புதுப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
புதுப்பாளையம் போலீசார் பிரதீஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






