என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குடிப்பழக்கத்தை கண்டித்ததால் காதல் மனைவியை தாக்கிய வாலிபர்
Byமாலை மலர்2 Jan 2022 6:24 AM GMT (Updated: 2 Jan 2022 6:24 AM GMT)
திருச்செந்தூர் அருகே குடிப்பழக்கத்தை கண்டித்ததால் மனைவியை சரமாரியாக தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
காயல்பட்டினம் லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் விஜி (வயது 29). கூலி வேலை செய்து வருகிறார். இவர் மாரி (24) என்பவரை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் தம்பதியினர் திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரத்தில் குடியிருந்து வருகின்றனர்.
விஜிக்கு குடிப்பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனையியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மாரியிடம் தகராறு செய்துள்ளார். அதனை அவர் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விஜி, மாரியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். அதனை அக்கம்பக்கத்தினர் தடுத்துள்ளனர். அவர்களை விஜி அவதூறாக பேசி உள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மாரியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக திருச்செந்தூர் போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X