search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குடிப்பழக்கத்தை கண்டித்ததால் காதல் மனைவியை தாக்கிய வாலிபர்

    திருச்செந்தூர் அருகே குடிப்பழக்கத்தை கண்டித்ததால் மனைவியை சரமாரியாக தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருச்செந்தூர்:

     காயல்பட்டினம் லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் விஜி (வயது 29). கூலி வேலை செய்து வருகிறார். இவர் மாரி (24) என்பவரை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். 

    திருமணத்திற்கு பின்னர் தம்பதியினர் திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரத்தில் குடியிருந்து வருகின்றனர். 

    விஜிக்கு குடிப்பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனையியிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

    இந்நிலையில் நேற்று மாலை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மாரியிடம் தகராறு செய்துள்ளார். அதனை அவர் கண்டித்துள்ளார். 

    இதனால் ஆத்திரமடைந்த விஜி, மாரியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். அதனை அக்கம்பக்கத்தினர் தடுத்துள்ளனர். அவர்களை விஜி அவதூறாக பேசி உள்ளார். 

    இதில் பலத்த காயமடைந்த மாரியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இது தொடர்பாக திருச்செந்தூர் போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×