என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    கிருஷ்ணகிரி அருகே கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது

    கிருஷ்ணகிரி அருகே கஞ்சா செடி வளர்த்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே பி.சிங்கிரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மப்பா (வயது45). கூலித்தொழிலாளி. இவரது வீட்டில், கஞ்சா செடி வளர்த்து வருவதாக பேரிகை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று சோதனை செய்து அவர் வீட்டில் வளர்த்து வந்த 6 கஞ்சா செடிகளை அழித்தனர். இதுதொடர்பாக போலீசார், அவரை கைது செய்தனர்.
    Next Story
    ×